IMF திட்டத்தின் கீழ் எரிசக்தி விலைகளை செலவுக்கேற்ற வகையில் நிர்ணயிப்பதாக ஜனாதிபதி உறுதி

IMF திட்டத்தின் கீழ் விலைகளை செலவுக்கேற்ற வகையில் நிர்ணயிர்க்கப்படும்

IMF திட்டத்தின் கீழ் எரிசக்தி விலைகளை செலவுக்கேற்ற வகையில் நிர்ணயிப்பதாக ஜனாதிபதி உறுதி

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) தொடர்பான ஐந்தாவது மற்றும் ஆறாவது மதிப்பாய்வுகளை நிறைவுசெய்து ஒப்புதல் அளிப்பதற்கான நடவடிக்கைகளை IMF நிறைவேற்றுக் குழு கடந்த மே 27ஆம் தேதி மேற்கொண்டது.

இதன்படி, இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் 695 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் மத்திய வங்கி ஆளுநரும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான டாக்டர் நந்தலால் வீரசிங்க ஆகியோர் இணைந்து IMF இன் மேலாண்மைப் பணியாளருக்கு மே 13ஆம் தேதி விளக்கக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

அக்கடிதத்தில் ஜனாதிபதி பின்வருமாறு தெரிவித்துள்ளார்:

"IMF திட்டத்தின் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, செலவுகளை ஈடுகட்டும் வகையில் மின்சாரம் மற்றும் எரிபொருள் விலைகளை மீட்டெடுப்பதற்கான பணிகளில் அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது. எரிபொருள் மானியங்கள் உள்ளிட்ட ஏனைய நிவாரண நடவடிக்கைகளுக்கு ரூ. 100 பில்லியன் வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்தொகை செப்டம்பர் மாத இறுதிக்குள் வழங்கப்படும்."

IMF இன் நீட்டிக்கப்பட்ட கடன் திட்டத்தின் கீழ் நாட்டின் பொருளாதார சீர்திருத்த செயல்முறையைத் தொடர்ந்து பேணுவதில் தாம் முழுமையாக உறுதிபூண்டுள்ளதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

மேலும், வருவாய் அடிப்படையிலான நிதி நிலைத்தன்மையை அடைதல், வலுவான சமூகப் பாதுகாப்பு வலையைச் செயல்படுத்துதல், நிதித்துறை சீர்திருத்தங்கள் மற்றும் செலவுக்கேற்ற எரிசக்தி விலை நிர்ணயம், பொதுக் கடன் நிலைத்தன்மை, விலை நிலைத்தன்மையைப் பேணுதல், அதிக மாற்று விகித நெகிழ்வுத்தன்மையுடன் அந்நியச் செலாவணிக் கையிருப்பை உருவாக்குதல், நிதித்துறை நிலைத்தன்மை மற்றும் ஊழல் அபாயங்களைத் தடுப்பதற்கான உயர் மட்டக் கட்டமைப்புச் சீர்திருத்தங்கள், மற்றும் இலங்கையின் வளர்ச்சி ஆற்றலை விரிவுபடுத்துதல் ஆகியவை அரசாங்கத்தின் நோக்கங்களாகும் என்று அந்தக் கடிதம் மேலும் குறிப்பிடுகிறது.